tag:blogger.com,1999:blog-52667620939048846102024-03-19T08:39:24.262+05:30சின்னத்துளிகள்சற்றே இறைத்து சற்றே அள்ள....நஜீபாhttp://www.blogger.com/profile/07901160285170082285noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5266762093904884610.post-49852758540837406402011-03-23T00:12:00.003+05:302011-03-23T00:19:14.570+05:30இந்தக் காமெடி பிடிச்சிருக்கு!<div style="text-align: justify;">இன்று வலையுலகின் போராளி சாந்தி அம்மையார் வெளியிட்டுள்ள ஒரு இடுகையை வாசித்தபோது, இவரது அறிவாற்றலையெண்ணி வியக்காமல் <span style="display: block;" id="formatbar_Buttons"><span class="" style="display: block;" id="formatbar_JustifyFull" title="Justify Full" onmouseover="ButtonHoverOn(this);" onmouseout="ButtonHoverOff(this);" onmouseup="" onmousedown="CheckFormatting(event);FormatbarButton('richeditorframe', this, 13);ButtonMouseDown(this);"><img src="http://www.blogger.com/img/blank.gif" alt="Justify Full" class="gl_align_full" border="0" /></span></span>இருக்க முடியவில்லை; அத்துடன், கொப்பளிக்கும் கோபத்திலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிற நகைச்சுவை உணர்வையும் கூட...!<br /><br /><span style="font-weight: bold;">நஜீபா அக்தர் = சேட்டைக்காரன் ??</span><br /><br />இந்தக் காமெடி பிடிச்சிருக்கு!<br /><br />பல கூகிள் தமிழ்க்குழுமங்களில் நான்காண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். அப்படியொரு குழுமத்தில் நான் எழுதிக்கொண்டிருந்தபோது, <span style="font-weight: bold;">"தமிழமுதம்" குழுமத்துக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்ததே அதன் நிர்வாகியான சாந்தி அம்மையார் தான்.</span> இப்போது இப்படியொரு இடுகையை எழுதியிருப்பதன் மூலம் அவர் நிரூபித்திருப்பது - <span style="font-weight: bold;">அவர் சொல்வதெல்லாம் பொய்; பொய்; பொய் தவிர வேறில்லை! </span><br /><br />அந்தக் குழுமத்தில் ஆரம்பத்தில் இணைந்த பல உறுப்பினர்கள், குறிப்பாக பெண் உறுப்பினர்கள் சொல்லாமல் கொள்ளாமல் விலகிவிட்டாலும், நான் மட்டும் கொஞ்ச நாட்கள் தாக்குப்பிடித்தேன். பெரும்பாலானோரின் கருத்துக்களோடு ஒவ்வாமை இருந்ததால், எந்தக் குழுமத்திலும் நான் அதிகம் எழுதியதில்லை. எனது வலைப்பூவிலும் அதிகம் எழுதுவதில்லை. இது வித்தியாசப்பட்டு நிற்க வேண்டும் என்ற எண்ணமுமில்லை. தற்செயலானது; இயல்பாக நிகழ்ந்தது என்பது மட்டும் உண்மை. மேலும் எனது பணி, மேற்படிப்பு மற்றும் குடும்பத்தில் மரணம் என சில இயல்பான காரணங்கள் நான் விரும்பினாலும் எழுத அனுமதிக்கவில்லை. 2008-ல் எனது மின்னஞ்சல் களவாடப்பட்டபோது, நிறுத்தி வைத்திருந்த நான், சின்னத்துளிகளை எழுதிக்கொண்டிருப்பது கொஞ்ச காலமாகத்தான்.<br /><br />வலையுலகில்தானே குழுமங்களும் இருக்கின்றன?<br /><br />கூகிள் குழுமங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு இவரது இடுகையிலுள்ள வன்மமும், இவர் அவிழ்த்து விட்டிருக்கிற பொய்மூட்டைகளும் புதிதல்ல. ஒருவரை நட்பாக்கிக் கொள்ள தனிமடல் மற்றும் மின்னரட்டை மூலம் தொடர்பு கொள்வது, <span style="font-weight: bold;">"உனக்கு யாராவது தனிமடல் எழுதுகிறார்களா? மின்னரட்டையில் என்ன பேசுகிறார்கள்?"</span> என்று கேட்டு மிகவும் அக்கறையுள்ளவர் போல நடிப்பது; <span style="font-weight: bold;">"அவன் ரொம்ப மோசம்; எப்படியெல்லாம் மடல் எழுதியிருக்கிறான் பார்,</span>" என்று யாரோ யாருக்கோ எழுதிய மடலையே அவர்களது அனுமதியில்லாமல் பிறருக்கு அனுப்புவது, அதே போல மற்றவர்களிடமிருந்து நமக்கு வருகிற மடல்களை அனுப்பச்சொல்லி நச்சரிப்பது என்று படிப்படியாகத் தனது உண்மை உருவத்தை வெளிக்கொணர்வார்.<br /><br />அப்புறம், <span style="font-weight: bold;">நாம் எழுதாததையும், சொல்லாததையும் சொல்லி, கோள்மூட்டி சண்டைமூட்டி வேடிக்கை பார்ப்பார். </span><br /><br />இது அபாண்டமல்ல! 200 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள எந்த கூகிள் குழுமங்களிலும் இவர் இருந்திருப்பார். அங்கே விசாரித்தால், நான் கூறியவை அனைத்தும் கண்டிப்பாகச் செய்திருப்பார். <span style="font-weight: bold;">(சில குழுமங்களில் அதற்கு மேலும் செய்திருப்பார்.)</span> கடைசியாக இவர் இருந்த குழுமத்திலும் இவருக்கு நிர்வாகத்தின் சார்பில் கடும் கண்டனம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பிற குழுமங்களிலிருந்து இவரை விலக்கியிருக்கிறார்கள் அல்லது விலக வற்புறுத்தப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை. இதை அவர் மறுக்கலாம்; ஆனால், இவர் இருந்த பெரும்பாலான குழுமத்தின் நிர்வாகிகளால் மறுக்க முடியாது.<br /><br /><span style="font-weight: bold;">ஏன், இதை வாசிக்கிறவர்கள் ஏதேனும் பெரிய குழுமத்திலிருந்தால், நான் சொல்வதை மறுக்க மாட்டார்கள். </span><br />எல்லாக் குழுமத்திலும் நிர்வாகிகளோடு சண்டைபோடுவதில் அம்மையார் சளைத்ததேயில்லை. நிர்வாகியின் கருத்துக்கு ஒத்த கருத்து உடையவராக எவரேனும் இருந்தால், அந்த உறுப்பினர் பாடும் திண்டாட்டம் தான். பெரும்பாலான குழுமங்களில் பெண் நிர்வாகிகளும் இருக்கிறார்கள் என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். <span style="font-weight: bold;">ஆக, ஆண்-பெண் என்றோ, நிர்வாகி-உறுப்பினர் என்றோ எவ்வித சலுகையும் காட்டாமல், முணுக்கென்றால் சண்டை போடுபவர் என்பதற்கான ஆதாரங்களை அந்தந்தக் குழுமங்களில் சென்று பார்க்கலாம்.</span><br /><br />தமிழமுதம் குழுமத்தில் பல பிரபல பதிவர்கள் இருக்கின்றனர். அவர்களில் யார் சாந்தி அம்மையாரின் பக்கம் என்று அந்தக் குழுமத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.<br /><br />சாந்தி அம்மையார் கவனத்திற்கு!<br /><br />மேற்கூறியவற்றில் நான் ஒரு பொய் எழுதியிருந்தால் கூட, நீங்கள் தாய்லாந்தில் இருந்தே என்மீது வழக்குப் போட முடியும் தெரியுமா? அப்படி நான் இட்டுக்கட்டி எழுதியிருந்தால் என் மீது நீங்கள் அவதூறு வழக்குத் தொடர முடியும். (தமிழமுதம் குழுமத்திலேயே கூட வழக்குரைஞர்கள் உள்ளனர் என்பதும் எனக்குத் தெரியுமே. அதில் ஒருவரைப் பற்றிக் கூட நீங்கள் தனிமடலில் பலருக்கு.....ஞாபகம் வருகிறதா?) அட ஆமாம், ஆள்மாறாட்ட வழக்கும் போடலாம்! :-)<br /><br />நெஞ்சில் துணிவும், நேர்மைத் திறனும் உள்ள பெண்மணியாயிருந்தால், cyber crime-க்கு புகார் கொடுங்கள். அவர்கள் நான் பெண்ணா, ஆணா, நஜீபாவா, சேட்டைக்காரனா, என்று கண்டுபிடிப்பதோடு நீங்கள் பசுவா, பசுத்தோல் போர்த்திய புலியா என்பதையும் தெளிவுபடுத்த உதவி செய்வார்கள்.<br /><br /><span style="font-weight: bold;">உங்களது மின்னஞ்சல்/மின்னரட்டை விளையாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. குழுமத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சாட்சியாக வரவும் தயார்! </span><br />உங்களுக்கு 30 நாட்கள் அவகாசம் தருகிறேன். Buzz-லும் வலைப்பதிவிலும் வீரத்தைக் காட்டுகிற நீங்கள், சட்டப்படி என் மீது புகார் அளியுங்கள். முடியாவிட்டால் பகீரங்கமாக மன்னிப்புக் கேளுங்கள்!<br /><br /><span style="font-weight: bold;">இது எனது பகீரங்கமான சவால்! தயாரா? </span><br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">அன்புள்ளங்களே!<br /><br />சட்டபூர்வமாக இது ஒரு ஆவணமாகக் கருதப்படும் என்பதால், பின்னூட்டமிடும் வசதியை எடுத்திருக்கிறேன். ஆர்வக்கோளாறில் எவரெனும் எதையோ எழுதி, சாந்தி அம்மையார் என் மீது புகார் கொடுத்தால், அதில் அவர்களும் சம்பந்தப்படுவதை நான் விரும்பவில்லை. புரிதலுக்கு நன்றி! </span><br /></div>நஜீபாhttp://www.blogger.com/profile/07901160285170082285noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5266762093904884610.post-40811568476535662482011-03-08T17:00:00.003+05:302011-03-08T17:06:15.259+05:30தொப்பிதொப்பி-தலையில் இடிவிழ...!<div style="text-align: justify;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT1CCiOhJt65_a6hvsByCAKqPCzIUQQSdUm7hUHRewzXmpA-0JdmuvJu_gjFohYPJqDo3R3W25QdJPMUM5UILZYFakMugCmmnuCuZ-MZrW3iCYpYDx68M26AXmfedpZvEswoYANJRzV0s/s1600/abusedwoman.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 213px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT1CCiOhJt65_a6hvsByCAKqPCzIUQQSdUm7hUHRewzXmpA-0JdmuvJu_gjFohYPJqDo3R3W25QdJPMUM5UILZYFakMugCmmnuCuZ-MZrW3iCYpYDx68M26AXmfedpZvEswoYANJRzV0s/s320/abusedwoman.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5581670211628715154" border="0" /></a>தமிழோடு உறவாடுகிற தருணங்களை அளிக்கிற இந்த இணையத்தில் சில அருவருப்புக்கணங்களுக்குள் ஆட்பட நேர்ந்து விடுவதும் உண்டு. அத்தகைய ஒரு உறுத்தலை இன்று உணர்வதற்கு, மகளிர் தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட பெரும்பாலான இடுகைகளிலிருந்து மாறுபட்டதாய், அதிமேதாவித்தனமாய், அரைகுறையாய், அவசர அவசரமாய் எழுதப்பட்ட "<a target="_new" href="http://thoppithoppi.blogspot.com/2011/03/blog-post_07.html">உலக மகளிர் தினம்- இதுங்க தலைல தீய வெச்சி கொளுத்த</a> <a href="http://thoppithoppi.blogspot.com/2011/03/blog-post_07.html" target="_blank"></a>" என்ற ஒரு இடுகை ஏற்படுத்தியிருக்கிறது. நரகலைத் தீண்டிய அருவருப்பு ஏற்பட்டுள்ளபோதிலும், இது போன்ற இடுகைகளுக்கு எதிர் இடுகை எழுதுவதில் தவறில்லை என்றே உணர்கிறேன்.<br /><br />தொப்பிதொப்பியின் பதிவின் ஒவ்வொரு பத்திக்கும் பதிலளித்து இதை நீளமாக்கவோ, வாசிக்கிறவர்களின் நேரத்தை விரயமாக்குவதோ எனது குறிக்கோள் அன்று. அவருக்கு உலக மகளிர் தினத்தின் வரலாறு கூட தெரியவில்லை என்பதை தனது இடுகையின் முதல்பத்தியிலேயே வெளிப்படையாக்கியிருக்கிறார். அவ்வகையில், அந்த இடுகை ஒரு எதிர் இடுகை எழுத உகந்ததுதானா என்ற கேள்வியும் எழாமலில்லை. பிரபலங்களோடு மோதி பிரபலமடைய விரும்புகிற முயற்சியாகவும் இதனைப் பிறழ்ந்து காண வாய்ப்பிருப்பதையும் உணர்கிறேன். இருப்பினும், எழுதாமல் இருந்தால், சரியானதைச் செய்யாத தவறைச் செய்ததாகும் வாய்ப்புள்ளது.<br /><br />தொப்பிதொப்பி என்ற இந்த அதிபுத்திசாலி உதிர்த்திருக்கிற சில அற்புதமான கருத்துக்கள்:<br /><br />1. ஆணின் சுயமரியாதையை அழிந்துவருகிற விலங்குகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.<br /><br /> <span style="color: rgb(102, 0, 0);">இதை வாசித்துப் பின்னூட்டமிட்ட ஆண்களில் ஒருவர் கூட (நான் இறுதியாகப் பார்த்தவரையிலும்) இதை ஆட்சேபிக்கவில்லை. ஒருவேளை, தொப்பிதொப்பியின் கூற்றுப்படி அவர்கள் தம்மை விலங்குகள் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள் போலும். </span><br /><br />2. பெண்ணுக்கு உரிமை வழங்கியதால், இன்று உலக நாடுகளின் சதியில் இந்தியா சிக்கித் தவிக்கிறது.<br /><br /><span style="color: rgb(153, 0, 0);"> கிழக்கு இந்தியக் கம்பனி இந்தியாவுக்கு வந்து ஆக்கிரமித்ததற்கு பெண்ணுரிமைதான் காரணமோ?</span><br /><br />3. இந்தியாவைப் பிடித்த ஊழல் என்னும் சீரழிவுக்கு பெண் என்ற பேய்தான் காரணம். (இதற்கு சான்றாக, பல பெண் அரசியல்வாதிகளின் படங்களைப் போட்டு வாசிக்க வந்தவர்களை பிரமிக்க வைத்திருக்கிறார் தொப்பிதொப்பி!)<br /><br /><span style="color: rgb(153, 0, 0);"> சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி, முதல் பிரதமர், இந்திய மாநிலங்களின் முதல் முதலமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். எத்தனை பெண்கள்?</span><br /><br />இப்படி, ஒன்று, இரண்டு, மூன்று என்று பட்டியலிட்டவருக்கு, தாத்தா சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறதாம். "இதுங்க தலைல தீய வெச்சி கொளுத்த."<br /><br />இப்படி அரைகுறையாகத் தகவல்களை வைத்துக்கொண்டு, பெண்களை இழிவாகப் பேசுபவர்களைப் பற்றி என் பாட்டி சொன்னது: இவனுங்க தலையிலே இடிவிழ...!"<br /><br />அடுத்து <span style="font-weight: bold;">ஆண்களே சிந்தியுங்கள்</span> (?!) என்று ஒரு அறைகூவல் விடுத்து, அதிலே......<br /><br /><span style="font-weight: bold;">ஆண்களுக்கு உரித்தான இடத்தில், தங்களது கவர்ச்சியைப் பயன்படுத்தி பெண்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களாம்.</span><br /><br />இந்த இடுகைக்குப் பின்னூட்டம் போட்ட பதிவர்கள் மட்டுமின்றி, தொப்பிதொப்பிக்கு ஒத்து ஊதுகிற புண்ணியவான்கள் இனிமேல் சினிமா நடிகைகளின் மார்புப்பிளவும், தொப்புளும் தெரிகிற படம்போட்டு இனிமேல் இடுகை எழுத மாட்டார்கள் என்று நம்புவோமாக. உங்களுக்குத்தான் பெண்களின் கவர்ச்சி வெறுப்பூட்டுகிறதே; அப்புறம் எதற்கு அத்தகைய படங்களை உபயோகப்படுத்துகிறீர்கள்?<br /><br />தொப்பிதொப்பியின் தாத்தா காலத்தில் பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தார்கள். தொப்பிதொப்பியின் பாட்டி, எப்போது தாத்தா அழைத்தாலும் போய்ப்படுத்து, பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும். வீடுகூட்டி சுத்தம்செய்து, துணிதுவைத்து, சமைத்துப்போட்டு, மாமியார் மாமனார் படுக்கையில் போகிற பீயைத் துடைத்துக்கொண்டிருக்க வேண்டும். தாத்தா குடித்துவிட்டு வந்து நடுத்தெருவில் போட்டு உதைத்தால், பாட்டி அழுதுகொண்டு, அலறாமல், திருப்பி அடிக்காமல் வாங்கிக்கொள்ள வேண்டும். இப்போது, இந்தக்கதையில் உள்ள பல சம்பவங்கள் மாறாமல் இருப்பதாவது தெரியுமா? பிறகு, என்ன மாறியிருக்கிறது? இப்போது பெண் வெளியே போகிறாள்; ஆணுக்கு நிகராய் பணம் ஈட்டுகிறாள். அவனைப்போலன்றி, சம்பாதித்த பணத்தைச் சேமித்து, குடும்ப எதிர்காலத்தை சமைக்கிறாள். அது இவர்கள் கண்களை உறுத்துகிறதோ?<br /><br />ஆமாய்யா, நீங்கள் போட்டிருப்பதுபோல, பெண்கள் புகைபிடிக்கிறார்கள்; மதுவருந்துகிறார்கள். இன்னும் இருக்கிறது உங்களது வயிற்றில் கலக்கம் ஏற்படுத்த! ஆனால், இவற்றைச் செய்யுமளவுக்குத்தூண்டுதலை ஏற்படுத்துகிற சூழலை உருவாக்கியது ஆணா பெண்ணா?<br /><br />இந்தியாவின் எந்தச் சட்டமும் பெண்கள் புகைபிடிப்பதோ, மதுவருந்துவதோ கூடாது என்று சொல்லவில்லை. பெரும்பாலான பெண்கள், தங்களுக்குக் கிடைக்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளும்போது, விதிவிலக்காக சில பெண்களும் தவறான வழிக்குப்போகத்தான் செய்வார்கள். அதை சட்டமே கேட்காதபோது, வேறு யார் கேட்பது?<br /><br />போய் புள்ளை குட்டியைப் படிக்க வையுங்கடா!<br /><br />இன்று பல பிரபல பெண்பதிவர்களின் இடுகைகளை வாசித்தேன். இந்த இடுகையையும் வாசித்து, சிலரிடம் மின்னரட்டையிலும், சிலரிடம் மின்னஞ்சலிலும், உள்ளூர்வாசிகளிடம் தொலைபேசியிலும் சொன்னேன். ஆனால், அவர்களுக்கு எதிர் இடுகை எழுதமுடியாமைக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒரு பொதுவான காரணம் இருந்தது. <span style="font-weight: bold;">"தொப்பிதொப்பி ஒரு லூஸு! கண்டுக்காதீங்க!!"</span><br /><br />சரி, அவங்களை விட்டு விடலாம்!<br /><br />"<span style="font-weight: bold; font-style: italic;">ஐயோ, என் கையைப்புடிச்சு இழுத்திட்டான். என்னை மின்னஞ்சலிலேயே வன்புணர்ச்சி பண்ணிட்டான்</span>,’ என்று அவ்வப்போது பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் படு அமைதியாக இருக்கிறார்கள். இவர்கள் பெண்ணியத்துக்காக போராடுகிற அழகு இவ்வளவுதான்! இந்த மாதிரி சில பெண்களால் தான் வலையுலகில் பெண்களை மட்டம்தட்டி எழுதுகிற துணிச்சல் பலருக்கு வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.<br /><br />தொப்பிதொப்பிக்கு ஒரு வேண்டுகோள்! ஒருநாள் அவர் தன்வீட்டுப்பெண்களோடு பிறிதொரு சந்தர்ப்பதில் உட்கார்ந்து, அவர்கள் வெளியே தெருவில் போய்வருவதற்குள் படுகிற இம்சைகளை, பார்வைத்துகிலுரிதல்களை, வார்த்தைகளாலான வன்புணர்ச்சிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வாராக. இதுகுறித்து இன்னும் விபரமாக எழுதலாம்!<br /><br /><span style="font-size:130%;"><span style="font-weight: bold;">பெண்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!</span><br /></span><br /><span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);">தொப்பிதொப்பியையும், அந்த இடுகைக்குப் போய் ஆஜர் போட்ட தொப்பிதொப்பியின் தோழர்களையும், பெண் பதிவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது எனது கருத்து.</span><br /><br />நான் இப்படிச் சொல்வதை வாசித்து பலர் நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொள்ளலாம். இது நடக்காமலும் போகலாம். அதனால், நஷ்டம் எங்களுக்கு, அதாவது பெண்களுக்கு அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.<br /><br />இறுதியாக......நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம் தொப்பிதொப்பி!<br /><br /><span style="font-weight: bold;">எங்களைத் தடுத்து நிறுத்துகிற வல்லமை உங்களுக்கோ, உங்களது ஜால்ராக்களுக்கோ கிடையாது. </span><br /><br />மகளிர் உலகம் மலர்ந்தே தீரும்! பாவம் நீங்கள்!!!<br /></div>நஜீபாhttp://www.blogger.com/profile/07901160285170082285noreply@blogger.com56tag:blogger.com,1999:blog-5266762093904884610.post-996668808739322742010-09-10T09:47:00.000+05:302010-09-10T09:48:14.251+05:30வந்திட்டாங்க சொம்பைத் தூக்கிட்டு....!<div style="text-align: justify;">ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு செய்திகளோடு, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு நேற்றுமுதல் வலையுலகில் விவாதிக்கப்படுகிற ஒரு பிரச்சினை குறித்து சில வரிகள் எழுத விருப்பம்.<br /><br />முதல் செய்தி: தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக, ஒரு இந்தி நடிகர் மீது புகார் கொடுத்த ஒரு பெண், இப்போது தான் பலாத்காரமே செய்யப்படவில்லை என்று நீதிமன்றத்தில் பல்டி அடித்திருக்கிறார்.<br /><br />இரண்டாவது செய்தி: பிரபல வயலின் கலைஞர் மீது அவர் வீட்டுப் பணிப்பெண் பலாத்கார குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.<br /><br />முதலாவது செய்தியில், உண்மையிலேயே அந்த நடிகர் நிரபராதியாக இருந்து, பொய்க்குற்றம் சாட்டப்பட்டு இத்தனை நாட்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால், அவர் மீது பரிதாபப்படுவோம்; அந்தப் பெண்ணின் மீது நமக்கு எரிச்சல் ஏற்படும். சொந்தப்பகையைத் தீர்த்துக்கொள்ள, பலாத்காரம் என்ற பாதகச்செயல் செய்ததாகப் பசப்பியதற்காக ஆத்திரம் பொங்கும். அத்துடன், இரண்டாவது செய்தியில் பலாத்காரம் செய்யப்பட்டதாகச் சொன்ன அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையின் மீது சந்தேகம் ஏற்படும். இவ்விரண்டு செய்திகளிலும் உண்மையிருந்தால் அந்த ஆண்களைத் தண்டிக்க நாம் எப்படித் துடிக்கிறோமோ, அதே துடிப்பு இவ்விரண்டு செய்திகள் பொய்களாய் இருக்கும்பட்சத்தில் அந்தப் பெண்களை மன்னித்து மறந்துவிட்டு விடாமலிருக்கவும் நமக்கு அறிவுறுத்த வேண்டும்.<br /><br />உங்கள் சொந்தச் சண்டைகளைத் தீர்த்துக்கொள்ள இணையத்தின் பரப்பையும், அங்கே கட்டப்பஞ்சாயத்து நடத்துகிற கருங்காலிகளின் உதவியையும் நாடாதீர்கள் - ஆணாதிக்கம் என்ற பெயரில்! பெண்ணுரிமை என்பது ஏதேனும் ஒரு காரணத்துக்காக திரும்பத் திரும்ப ஆண்களை எதிர்க்க, ஆண்களின் ஆதரவையே நாடுவது என்ற நகைமுரண் அல்ல! ஒரு பெண்ணின் பரிணாம சிந்தனை வளர்ச்சி அது! அதை கூட்டம்போட்டுத் துவைத்தெடுக்கிற அடாவடித்தனமாக்கி, பெண்ணியத்தைக் கேலி செய்பவர்களின் வாயில் அவல் போட்டு விடாதீர்கள்!<br /><br />சம்பந்தப்பட்ட இடுகைகளை வாசித்தாலே, அந்த சகோதரிக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முகாந்திரங்கள் பல வாய்த்திருக்கின்றன என்பதனை அவர் வாயிலாகவே அறிகிறோம். முறைப்படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, சொந்தப் பிரச்சினையை, ஆம், இது அவர் சொந்தப் பிரச்சினைதான், பொதுவிடத்தில் விவாதித்து, அனுதாபம் தேடுகிற அனாவசிய முயற்சிகளை செய்து பெண்ணுரிமையை மூணு முழம் பத்து ரூபாய்க்கு மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் விற்பனை செய்து விடாதீர்கள்.<br /><br />பெண்ணை வேண்டுமென்றே இழிவு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டம், நியாயம், மனிதாபிமானம் போன்றவற்றை மதிக்கத்தெரியாதவர்கள் என்பது வெளிப்படை. அவர்களுக்கு பாடம் புகட்டுவதாக எண்ணிக்கொண்டு, நாமும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டால், இருபாலாருக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?<br /><br />தங்களுக்கு வருகிற தனிமடல்களையும், மின்னரட்டை சம்பாஷணைகளையும் பொதுவில் போட்டு வெளுத்துக்கொண்டிருக்கிறவர்கள் எவ்வளவு தூரம் நம்பத்தக்கவர்கள்? அவர்களையும் ஆண், பெண் என்று பிரித்துப் பார்க்க வேண்டுமா? இதென்ன கேலிக்கூத்து...?<br /><br />பெண்களுக்காக உதட்டளவில் அனுதாபப்படுகிற ஆண்களின் எண்ணிக்கை பெயரளவில் மட்டும் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். ஆனால், இது போன்ற விஷயங்களை ஆண்,பெண் பாகுபாட்டின் அடிப்படையில் அணுகி, ஊதிப்பெரிதாக்கினால், அது பெண்களின் மீது உண்மையான அனுதாபமும் கரிசனையும் உள்ள ஆண்களையும் நம்மிடமிருந்து விலக்கி, முதலைக்கண்ணீர் விடுகிற மோசடி ஆசாமிகளையே எங்கு பார்க்கினும் கொண்டுவந்து நிறுத்தும் என்பது திண்ணம்<br /></div>நஜீபாhttp://www.blogger.com/profile/07901160285170082285noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5266762093904884610.post-12421238968475149122010-06-17T00:11:00.002+05:302010-06-17T00:14:45.317+05:30எத்தனை பெண்கள் அறிவார்?<div style="text-align: justify;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdDcT3N19wOrxD0Mb-aYY1CQgDdz535Hxf4Y6yaMM5Zbt5lNU1jp2Sl99bUTe5QVkYVedgIDOgMr9PSorNQ9yzaVzNtDTwbLHPMPvctCWgYQnQPpd0V_sn13uGsgfHlOBVaVqMu-7ZvjY/s1600/Harassment.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 230px; height: 230px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdDcT3N19wOrxD0Mb-aYY1CQgDdz535Hxf4Y6yaMM5Zbt5lNU1jp2Sl99bUTe5QVkYVedgIDOgMr9PSorNQ9yzaVzNtDTwbLHPMPvctCWgYQnQPpd0V_sn13uGsgfHlOBVaVqMu-7ZvjY/s320/Harassment.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5483443752162130738" border="0" /></a><span style="color: rgb(51, 0, 0);">மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி வரையிலான பயணத்தின் போது, ஜன்னல் இருக்கையைக் கொடுத்ததன் மூலம் சினேகிதமான ஒரு சட்டக்கல்லூரி மாணவியுடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. நான் ஒரு பிஸியோதெரபிஸ்ட் என்றதும் என்னை ஏற இறங்கப் பார்த்து பொருள்பொதிந்த சிரிப்பை உதிர்த்தார்.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"மதுரையிலே ஹோம் சர்வீஸுக்குக் கூட நிறைய பேர் போகிறார்களாமே?"</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"ஆமாம்! நான் கூட போவதுண்டு!" என்று பதிலளித்தபோது அவரிடமிருந்து அடுத்து என்ன கேள்வி வரப்போகிறது என்று என்னால் எதிர்பார்க்க முடிந்தது.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"தொந்தரவு எதுவுமில்லையே?"</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">இந்தக் கேள்விக்கு ’இல்லை.’ என்று பதில் சொல்ல முடியாத இயலாமை குறித்து நான் சங்கடப்பட வேண்டுமா அல்லது அப்படியொரு பாதுகாப்பின்மை இருப்பது குறித்து, இவ்விதமான சூழலை ஏற்படுத்துகிற சில ஆண்கள் வெட்கப்பட வேண்டுமா என்பதே எனது குழப்பம்! </span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"தொந்தரவு எல்லா இடத்திலும் தானிருக்கிறது," என்று முதலில் தொட்டும் தொடாமலும் பதிலளித்தேன். ஆனால், மதுரையின் எல்லையைத் தாண்டுவதன் முன்னமே அவரது கேள்விக்கு, அவர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சற்று அதிகமாகவே பதிலளித்து விட்டிருந்தேன்.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"என்னத்தைப் பண்ணுறது?" என்று முடித்தபோது, அதுவரை சகபயணியாக இருந்த அந்த இளம்பெண், தனது வழக்குரைஞர் முகத்தைப் புனைந்து கொண்டார்.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"நாம ரொம்ப பயப்படுறா மாதிரியில்லே?" என்று சிரித்தார். "விருப்பமில்லாமத் தொடறது ஒருபக்கம்! தகாத வார்த்தைகள் பேசுறது, அசிங்கமான சைகைகள் காட்டுறது, அருவருப்பான நடவடிக்கைகள், இவ்வளவு ஏன், கண்ணடிக்கிறது கூட ஒரு விதமான பாலியல் கொடுமை தான்! நம்ம நாட்டுலே இதுக்கு மட்டும் இன்னும் சரியான, வலுவான சட்டங்கள் இல்லாமப் போயிடுச்சு! சில பிரபலங்கள் குறித்த பாலியல் கொடுமை குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதும், சுலபமாத் தப்பிச்சிக்கிட்டாங்க! ஒரு விதத்துலே பலாத்காரம் மட்டும் தான் பாலியல் கொடுமைன்னு நம்ம சட்டம் சொல்லுதோன்னு தோணுது!"</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">நானும் அவரோடு சேர்ந்து சிரித்தேன்.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"ஆமா! எங்க மருத்துவமனையில் ஒரு முறை ஒரு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்டாள். எத்தனை நிருபர்கள்? எத்தனை கேமிராக்கள்? ஐ.சீ.யூவில் இரத்தப்போக்கு நிற்காமல் அந்தப் பெண் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவே போராடிக்கொண்டிருக்க, இவர்களுக்கு தலைப்புச் செய்திக்கான நேரம் போய்க்கொண்டிருக்கிறதே என்று கவலை!"</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"போலீஸ் வந்தார்களோ?" அக்கறையோடு கேட்டார் அந்தப் பெண்.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"ஓ! மருத்துவமனையிலிருந்தே தகவல் கொடுத்து விட்டார்கள்!"</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"நல்ல வேளை! உங்களுக்குத் தெரியுமா? நமது நாட்டில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டவர்களில் நூற்றுக்கு இரண்டு சதவிகிகம் பெண்கள் தான் புகார் அளிக்க முன்வருகிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அப்படியே புகாரும் அளித்து, குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டு விட்டாலும் கூட, அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகள் தான்! மேலும் குற்றவாளி தாராளமாக ஜாமீனும் பெற்றுக்கொண்டு சென்று விடலாம்!"</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">கேட்கக் கேட்க ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டு வந்தது எனக்கு.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"எப்படியம்மா புகார் கொடுப்பார்கள்? போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக ஆண்களே பயப்படுகிறார்களே? பெண்கள் எப்படிப் போவார்கள்?" என்று பொறுக்க மாட்டாமல் கேட்டேன்.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"உண்மை தான்!," என்று ஆமோதித்த அந்தப் பெண்," உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இன்னும் பாலியல் பலாத்காரம் போன்ற புகார்களை, சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளைப் போல, வழக்கமான காவல் நிலையங்களில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை முழுக்க முழுக்க பெண் காவலர்கள் பணி புரியும் மகளிர் காவல் நிலையங்களிலேயே பதிவு செய்யலாம்!"</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"யாருக்குத் தெரிகிறது இது போன்ற சட்டங்கள் எல்லாம்?" என்று விரக்தியோடு கேட்டேன்.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"தெரிந்து கொள்ளுங்களேன்! பொதுவாக மகளிர் காவல் நிலையம் என்றாலே வரதட்சிணைக் கொடுமை, கணவனின் வன்முறை போன்ற குடும்பச் சச்சரவுகளைத் தீர்க்கிற இடமாகத் தான் கருதுகிறார்கள். இது குறித்து குற்றவியல் நடைமுறையில் திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இது எத்தனை காவல் நிலைய அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கும் என்பதே சந்தேகம் தான்!" என்று அவர் கூறியபோது சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. ஆனால், அவர் அடுத்ததாகச் சொன்ன செய்தியைக் கேட்டு ஒரு கனம் அதிர்ந்து விட்டேன்.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"கடந்த நாற்பது ஆண்டுகளில், இந்தியாவில் எது வளர்ந்திருக்கிறதோ இல்லையோ, கற்பழிப்பு வழக்குகள் மட்டும் சுமார் 700 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது!"</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"ஐயோ, புகார் கொடுத்தவங்க கணக்கே இவ்வளவுன்னா, கற்பனை பண்ணவே பயமாயிருக்கே?"</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">சிறிது நேரம் தனக்குத் தெரிந்த சட்டங்கள் குறித்து எனக்கு அந்தப் பெண்மணி விளக்கியதோடு, தான் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தவற்றையும் எனக்கு வாசித்துக் காட்டினார். பாலியல் பலாத்காரம் சட்டத்தில், நல்ல வேளையாக, இப்போது சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். அதன் படி, ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளியை அதிகபட்சமாக ஐந்து குற்றங்களின் அடிப்படியில் தண்டிக்க வழிவகைகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"இவையெல்லாம் நடைமுறைப்படுத்தப் படுமா?" என்று கேட்டேன்.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"நடைமுறைப்படுத்த வேண்டும்! அப்போது தான் பயம் வரும்! இரண்டு வருடங்களோடு இது நிற்காது என்ற புரிதலும் ஏற்படும்!" அவர் கூறியது அப்போது எனக்கும் சரியென்று பட்டது. ஆனால், இப்போது ’பாலியல் பலாத்காரம் என்பது திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிற குற்றமா அல்லது ஒரு வெறிக்கணத்தில் நிகழ்த்தப்படுகிற கொடூர செயலா என்று சற்றே குழப்பமேற்பட்டது. அதை தெளிவித்துக் கொள்ள வேண்டும்!</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">"நீங்கள் சொல்லுகிற மாதிரியே பொது இடங்களில் தொந்தரவு செய்கிற ’நல்ல புள்ளை’களுக்கும் நரம்பெடுக்கிற மாதிரி சட்டம் வருமா?" என்று கேட்டேன்.</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0);">’வந்துட்டா மட்டும்.....?’ என்று கேட்டுச் சிரித்தார் அந்தப் பெண்மணி!</span><br /><br /><span style="color: rgb(51, 0, 0); font-weight: bold;">அட, ஆமா இல்லே? வந்திட்டா மட்டும்????????????????????????????</span><br /></div>நஜீபாhttp://www.blogger.com/profile/07901160285170082285noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-5266762093904884610.post-3134320941187756212010-06-14T20:43:00.001+05:302010-06-14T20:45:32.927+05:30சேட்டைக்காரனுக்கு ஒரு வேண்டுகோள்!<div style="text-align: justify;">நகைச்சுவை என்பதன் முழுமையான பரிமாணத்தை இந்த ஒரு சில மாதங்களில் நான் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்ததற்கு <a href="http://settaikkaran.blogspot.com">சேட்டைக்காரன்</a> ஒரு முக்கிய காரணம்.<br /><br />பிறரைச் சிரிக்க வைப்பது அனைவராலும் முடியாது; அதிலும் எவர் மனதையும் புண்படுத்தாமல், சற்றும் விரசம் கலக்காமல் நகைச்சுவையாக எழுதுவது ஒரு அலாதியான கலை! இப்படி எழுதுகிறவர்களில் முதன்மையானவர் சேட்டைக்காரன்!<br /><br />சமகால நிகழ்வுகள் குறித்த அவரது இடுகைகளில் நகைச்சுவை கொப்பளித்தாலும், அனைவரையும் போல அவர் தன்னைச் சுற்றியிருக்கிற சமூகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாக உணரமுடியும்.<br /><br />இணையத்தில் இன்றளவில் எனக்கிருக்கிற விரல்விட்டு எண்ணக் கூடிய நல்ல நட்புக்களில் அவரும் ஒருவர்; அவரே முதலானவரும் கூட!<br /><br />சோர்ந்திருக்கும் பொழுதுகளில், உற்சாகத்தைப் பீறிட வைத்து மனம்விட்டுச் சிரிக்க வைத்த சேட்டைக்காரன், வலையுலகத்திலிருந்து வனவாசம் செல்வது எனக்கும் என் நட்பு வட்டத்துக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.<br /><br />வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள்; சேட்டைக்காரனின் இடுகைகள் பலருக்கு உற்சாக ஊட்டச்சத்து மருந்தாக இருந்தது என்பதை நான் அறிவேன்.<br /><br />சேட்டைக்காரன்! நீங்கள் யார், எந்த ஊர், உங்களது உண்மையான பெயர் என்ன - இவை யாருக்கும் தெரியாது. இப்படியொரு விபரீதமான முடிவை மேற்கொள்ளுமளவுக்கு நடந்தது என்ன? - இதுவும் தெரியாது.<br /><br />ஆனால், மீண்டும் வருவீர்களா? விரைந்து வருவீர்களா? எங்களை மீண்டும் சிரிப்புக்கடலில் ஆழ்த்துவீர்களா?<br /><br />காத்திருக்கிறோம், நம்பிக்கையோடு!</div>நஜீபாhttp://www.blogger.com/profile/07901160285170082285noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5266762093904884610.post-23114349717561763922010-05-19T15:01:00.000+05:302010-05-19T15:04:09.673+05:30போங்கடா, நீங்களும் உங்க ஆண்மையும்......!<div style="text-align: justify; color: rgb(51, 0, 51);"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirZaApeNq_pRWCquRW9ymg1hAnes-BH6thJcKcI1_66vnnloT0iw5XaZO-SGpsU4ogHwOTLvodmTo35OUglFjEQsp3CuoZxhwM9Tvfn2tNsr6V_ebwZuWVdbV3n9VJ74_tyfV0QcJv6gg/s1600/court04.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 288px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirZaApeNq_pRWCquRW9ymg1hAnes-BH6thJcKcI1_66vnnloT0iw5XaZO-SGpsU4ogHwOTLvodmTo35OUglFjEQsp3CuoZxhwM9Tvfn2tNsr6V_ebwZuWVdbV3n9VJ74_tyfV0QcJv6gg/s320/court04.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5472911803974736626" border="0" /></a>சிறுபிராயத்தின் ஆசைகள் சிறகடித்த போதிலும், பெற்றொருக்காகவும் உடன்பிறந்தோருக்காகவும் குடும்ப பாரத்தைச் சுமக்கிற பெண்கள் நம் நாட்டில் இலட்சக்கணக்கில் இருப்பார்கள்! ஆனால், அவர்களின் மீது வண்ணவிளக்குகளின் வெளிச்சம் விழாததால், அவர்களது வியர்வையும் இரத்தமும் இன்னும் குழாய்த்தண்ணீரோடு ஒப்பிடப்படவில்லை.<br /><br />ஒரு பெண்ணை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அந்தப் பெண்ணின் பெயரைத் தன் மீது எழுதிக்கொண்டு, அவளுக்கு அணிவிக்க விரும்பிய செருப்புமாலையைத் தான் அணிந்து கொண்டு ஒரு ஆண் கழுதை மீது ஏறி ஊர்வலம் போனபோது, அவன் தன்னைப் பெற்ற தாயின் கருப்பையைக் கொச்சைப்படுத்தியிருப்பதை மீசை வைத்த மற்ற ஆண்கள் உணரவில்லை.<br /><br />பணத்துக்காக நடிகைகள் எதையும் செய்வார்கள் என்று ஒரு இயக்குனர் சொன்னபோது, அந்த இயக்குனருக்கு இருந்த அரசியல் தொடர்பு காரணமாக, பொதுமக்களின் பிரதிநிதிகளோ கலாச்சாரத்தின் காவலர்களோ புருவத்தைக் கூட நெரிக்கவில்லை. அந்த இயக்குனர் வருத்தம் தெரிவித்ததும் அந்த சம்பவம் மறக்கப்பட்டது; மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டது.<br /><br />நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மைச் சூழ்ந்திருக்கிற விபரீதக்கலாச்சாரத்தின் வீச்சு குறித்து எதார்த்தமாக ஒரு பெண்மணி கருத்துச் சொன்னதும் கோவலர்களுக்குக் கோபம் வந்து விட்டது. சீழ் படிந்திருந்த நெற்றிக்கண்களைத் திறந்தபடி, சில போலிக்கடவுளர்கள் பொத்துக்கொண்டு வந்த சினத்தால் அனல்பறக்கும் நீதிமன்ற வழக்குகளை அடுத்தடுத்துத் தொடுத்தனர். மேடைகளில் ஆபாச வார்த்தைகளை அள்ளியள்ளி இறைத்தனர்.<br /><br />கண் துடைக்கப் பயன்படாத கைக்குட்டைகளை வாயில் அடைத்துக்கொண்டு வாளாவிருந்தது சாமானியனின் சமூகம்! வார்த்தைகளால் ஒரு பெண் துகிலுரியப்படுவதைப் பார்த்துக்கொண்டு வாயிலிருந்து நீரை வழிய விட்டன வல்லூறுகள்! காசுக்காய் கடைவிரித்த பத்திரிகைகள், அந்தப் பெண்ணின் மார்பு தெரியும் படங்களை முகப்பில் போட்டு மந்தகாசப்புன்னகை செய்தன.<br /><br />உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டிய குட்டில், பாசாங்கு செய்தவர்கள் பாதாலத்தில் அமிழ்ந்தனர். பலி ஆடு தப்பித்து விட்டதே என்று பரிதவித்தன உருப்படாத ஓநாய் கூட்டங்கள்!<br /><br />ஓட ஓட விரட்டி, அந்தப் பெண்ணும் அரசியலுக்குள் நுழைந்ததும், தரங்கெட்ட வார்த்தைகளை மீண்டும் தத்தெடுத்துக்கொண்டிருக்கின்றனர் சில உத்தமபுத்திரர்கள். அவளது கடந்தகாலப் பக்கங்களை எடுத்துத் திருத்தி எழுதி திருப்தியடைந்து கொண்டிருக்கின்றனர் சில தில்லுமுல்லுக்காரர்கள்!<br /><br />அந்தப் பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவளாய், ஒரு பெண்ணாய் அவரது துணிச்சலுக்குத் தலை வணங்குகிறேன். அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளும் திராணியற்று, அவரை இழித்துப் பேசி ஈனப்படுத்த நினைக்கும் உளுத்துப்போன உள்ளங்களைப் பார்த்து, ’பெண் ஜெயித்து விட்டாள்,’ என்று பேருவகை கொள்ளுகிறேன்.<br /><br />போங்கடா, நீங்களும் உங்க ஆண்மையும்......!<br /></div>நஜீபாhttp://www.blogger.com/profile/07901160285170082285noreply@blogger.com72tag:blogger.com,1999:blog-5266762093904884610.post-66919141961266786302010-02-21T12:20:00.000+05:302010-02-21T12:21:13.361+05:30பிரியாவிடைஇறுகிய மனமும்<br />இளகிய கண்களும்<br />இனியென்னவென்ற வினாவுமாய்<br />என் தாய்!<br /><br />ஒருவரது கண்ணீர்த்துளிகள்<br />மற்றவரது கரத்தில்<br />மாறி மாறி விழுந்து கொண்டிருந்தன.<br /><br />இறுதியாய் என்னிடம் அப்பா சொன்னது<br />ஒரே வார்த்தை தான்<br />"உம்மாவை......."<br /><br />அவரைப் பேசவும் விடாமல்<br />அழைத்துச்சென்றது<br />அவசரக்கார மரணம்<br /><br />அந்தரத்தில் நின்றுவிட்ட<br />ரங்கராட்டினமாய் நாங்கள்!<br /><br />பெய்துகொண்டிருந்த பேய்மழை<br />செவிலியர்களின் காலணிச்சத்தம்<br />தம்பி,தங்கையின் விசும்பல்<br />இவற்றை விடவும்<br />உம்மாவின் மவுனம்<br />உரத்து உரத்துக் கேட்டது<br /><br />வெள்ளைவாகனத்தில் வந்தவருக்காக<br />வாசலில்<br />கருப்புவாகனம் காத்திருந்தது<br /><br />நாட்காட்டி உதிர்த்த தேதிகளை<br />மீண்டும் ஒட்டமுடியாதா?<br /><br />இனி ஊருக்கு வருகையில்<br />ஒருஜோடிக் கண்களும்<br />ஒரு கோடிக் கனவுகளும்<br />குறைந்திருக்கப்போகின்றன<br /><br />அப்பாவின் நினைவுகள்!<br />நிலைப்படியிலிருந்து<br />தாழ்வாரம்வரையிலும்<br />நிறைந்திருக்கப்போகின்றனநஜீபாhttp://www.blogger.com/profile/07901160285170082285noreply@blogger.com4