Monday, June 14, 2010

சேட்டைக்காரனுக்கு ஒரு வேண்டுகோள்!

நகைச்சுவை என்பதன் முழுமையான பரிமாணத்தை இந்த ஒரு சில மாதங்களில் நான் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்ததற்கு சேட்டைக்காரன் ஒரு முக்கிய காரணம்.

பிறரைச் சிரிக்க வைப்பது அனைவராலும் முடியாது; அதிலும் எவர் மனதையும் புண்படுத்தாமல், சற்றும் விரசம் கலக்காமல் நகைச்சுவையாக எழுதுவது ஒரு அலாதியான கலை! இப்படி எழுதுகிறவர்களில் முதன்மையானவர் சேட்டைக்காரன்!

சமகால நிகழ்வுகள் குறித்த அவரது இடுகைகளில் நகைச்சுவை கொப்பளித்தாலும், அனைவரையும் போல அவர் தன்னைச் சுற்றியிருக்கிற சமூகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாக உணரமுடியும்.

இணையத்தில் இன்றளவில் எனக்கிருக்கிற விரல்விட்டு எண்ணக் கூடிய நல்ல நட்புக்களில் அவரும் ஒருவர்; அவரே முதலானவரும் கூட!

சோர்ந்திருக்கும் பொழுதுகளில், உற்சாகத்தைப் பீறிட வைத்து மனம்விட்டுச் சிரிக்க வைத்த சேட்டைக்காரன், வலையுலகத்திலிருந்து வனவாசம் செல்வது எனக்கும் என் நட்பு வட்டத்துக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள்; சேட்டைக்காரனின் இடுகைகள் பலருக்கு உற்சாக ஊட்டச்சத்து மருந்தாக இருந்தது என்பதை நான் அறிவேன்.

சேட்டைக்காரன்! நீங்கள் யார், எந்த ஊர், உங்களது உண்மையான பெயர் என்ன - இவை யாருக்கும் தெரியாது. இப்படியொரு விபரீதமான முடிவை மேற்கொள்ளுமளவுக்கு நடந்தது என்ன? - இதுவும் தெரியாது.

ஆனால், மீண்டும் வருவீர்களா? விரைந்து வருவீர்களா? எங்களை மீண்டும் சிரிப்புக்கடலில் ஆழ்த்துவீர்களா?

காத்திருக்கிறோம், நம்பிக்கையோடு!

7 comments:

Chitra said...

ஆனால், மீண்டும் வருவீர்களா? விரைந்து வருவீர்களா? எங்களை மீண்டும் சிரிப்புக்கடலில் ஆழ்த்துவீர்களா?

காத்திருக்கிறோம், நம்பிக்கையோடு!



..... YES!

இளந்தென்றல் said...
This comment has been removed by the author.
Ananya Mahadevan said...

நானும் கூட..

சென்ஷி said...

வழிமொழிகின்றேன் :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானும் வழிமொழிகிறேன்.

பனித்துளி சங்கர் said...

///////சோர்ந்திருக்கும் பொழுதுகளில், உற்சாகத்தைப் பீறிட வைத்து மனம்விட்டுச் சிரிக்க வைத்த சேட்டைக்காரன், வலையுலகத்திலிருந்து வனவாசம் செல்வது எனக்கும் என் நட்பு வட்டத்துக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
//////\


எனக்கும்தான் இதே ஆதங்கங்கள் . நண்பர் விரைவில் வருவார் .

settaikkaran said...

அன்புக்கு நன்றி! :-)
தயவு செய்து இந்த இடுகையை அழித்தால், மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.